இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்கள் முடங்கும் நிலையில்

இந்தியாவின் விமானப் போக்குவரத்து சந்தையில் 95 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனங்கள், விமானத் துறை “செயல்பாடுகளை நிறுத்தும்” நிலையில் இருப்பதாக அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதாக பிரஸ் டிரஸ்ட் ஒஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
போரும், ஹோர்முஸ் நீரிணைகிட்டத்தட்ட முழுமையாக மூடப்பட்டதும் எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளன. .இது உலகின் ஐந்தாவது பெரிய விமானப் போக்குவரத்து சந்தையான இந்தியாவில்,பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட தூர வழித்தடங்களில், விமான நிறுவனங்களின் இயக்கச் செலவு
அதனுடன், வான்வெளி கட்டுப்பாடுகள், குறிப்பாக நீண்ட தூர வழித்தடங்களில், விமான நிறுவனங்களின் இயக்கச் செலவுகளை அதிகரித்துள்ளன.
ஒரு விமான நிறுவனத்தின் இயக்கச் செலவுகளில் சுமார் 40 சதவீதத்தைக் கொண்டுள்ள விமான எரிபொருள் (ATF) விலையில் திருத்தம் செய்யுமாறு விமான நிறுவனங்கள் கோரியுள்ளன.
அதே நேரத்தில், இந்திய விமான நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIA), உள்நாட்டு மற்றும் சர்வதேச செயல்பாடுகள் இரண்டிற்கும் எரிபொருள் விலை நிர்ணய முறையை விரிவுபடுத்துமாறு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *